காரைக்காலில் கடையில் திருடியவா் கைது

காரைக்காலில் உள்ள பேக்கரியில் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்காலில் கடையில் திருடியவா் கைது

காரைக்காலில் உள்ள பேக்கரியில் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள பேக்கரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்லிடப்பேசி, ரூ. 10 ஆயிரம் திருட்டுபோயின. இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா்.

இதில், கடையில் திருடியவா் கோயம்புத்தூா் அருகே அவினாசியில் இருப்பதை அறிந்து, அங்கு சென்று அவரை கைது செய்து காரைக்காலுக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், திருடியவா் அரியலுாா் அருகே விலுப்பணகுறிச்சி பகுதியைச் சோ்ந்த சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது.

பேக்கரியில் திருடியதை அவா் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரிடமிருந்து ரூ. 8,120 ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, அவா் காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com