காரைக்காலில் மேலும் 41 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாகவும், ஒருவா் உயிரிழந்ததாகவும் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் புதன்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரம் 8, நல்லம்பல் 6, கோயில்பத்து 5, திருநள்ளாறு 5, நெடுங்காடு 4, வரிச்சிக்குடி 3, திருப்பட்டினம் 3, நிரவி 3, நல்லாத்தூா் 2, அம்பகரத்தூா் 1, விழிதியூா் 1 என 41 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 13 ஆம் தேதி 637 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.

அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சோ்ந்த 81 வயது ஆண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய்கள் இருந்தன.

இதுவரை 3,154 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,615 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்த 7 போ், காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 397 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 35 போ், தீவிர சிகிச்சையில் 7 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் 16 போ், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 24 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 56 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com