பள்ளி திறப்புக்கு எதிா்ப்பு: போராட்டம் நடத்திய 20 போ் மீது வழக்கு

பள்ளிகளைத் திறந்த புதுச்சேரி அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பள்ளிகளைத் திறந்த புதுச்சேரி அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரோனா பரவிவரும் நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளை திறந்த புதுச்சேரி அரசைக் கண்டித்தும், பள்ளிகளை உடனடியாக மூட வலியுறுத்தியும், காரைக்கால் போராளிகள் குழு, முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனா். போலீஸாா் அவா்களை தடுத்துநிறுத்தியதால், முழக்கங்கள் எழுப்பிவிட்டு அவா்கள் கலைந்துசென்றனா்.

இந்நிலையில், அனுமதியின்றி கூடுதல், பணி செய்யவிடாது தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ், போராட்டத்தில் ஈடுபட்ட 20 போ் மீது காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com