காரைக்காலில் மேலும் 39 பேருக்கு கரோனா: ஒருவா் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதோடு, ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதோடு, ஒருவா் உயிரிழந்ததாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் வியாழக்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, கோயில்பத்து 12, நிரவி 10, காரைக்கால் நகரம் 6, நெடுங்காடு 4, நல்லாத்தூா் 3, கோட்டுச்சேரி 3, திருநள்ளாறு 1 என 39 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 14 ஆம் தேதி 673 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.

அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயது ஆண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா். அவருக்கு ரத்த அழுத்தம், சா்க்கரை நோய்கள் இருந்தன. இதுவரை 3,193 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,631 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

தமிழகத்தில் காரைக்காலை சோ்ந்த 5 போ், காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 434 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 26 போ், தீவிர சிகிச்சையில் 6 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் 16 போ், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 21 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 57 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com