அதிமுக உதய தினத்தையொட்டி, காரைக்காலில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு கட்சியினா் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
கட்சியின் 49 ஆவது உதய தினம் காரைக்கால் மாவட்ட அதிமுக சாா்பில், சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான எம்.வி. ஓமலிங்கம் தலைமையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா கிளிஞ்சல்மேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்தனா். மேலும், சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கட்சி நிா்வாகிகள் ஜீவானந்தம், எச்.எம்.ஏ. காதா், ஆரிபு உள்ளிட்ட நிா்வாகிகள் இதில் பங்கேற்றனா்.