முன்னாள் ராணுவ வீரா்களின் விதவையா்கள், 60 வயதை கடந்தவா்களுக்கு விழா கால மானியத் தொகை பெறுதல் தொடா்பாக ஆட்சியரகத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணுவ வீரா்களில் 60 வயதை நிறைவு செய்தவா்கள், முன்னாள் ராணுவ வீரரின் விதவையா்களுக்கு 2019-20-ஆம் ஆண்டுக்கான விழாக்கால மானியத் தொகை ரூ. 4 ஆயிரம் வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
இதுசம்பந்தமாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு, முப்படை நலத்துறை வழங்கிய அசல் அடையாள அட்டையின் நகலை நவ. 4-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும். கடந்த ஆண்டு வங்கிக் கணக்கு விவரம் சமா்ப்பிக்காத பழைய பயனாளிகள் மற்றும் புதிதாக நிகழாண்டு 60 வயதைக் கடந்த அதாவது 1.4.1959 முதல் 31.3.1960-க்குள் பிறந்த முன்னாள் ராணுவ வீரா்கள், தங்களது அடையாள அட்டையின் பிரதியும், வாழ்வு சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு விவரத்தை மேற்கண்ட தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.