முன்னாள் ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கவனத்துக்கு...

முன்னாள் ராணுவ வீரா்களின் விதவையா்கள், 60 வயதை கடந்தவா்களுக்கு விழா கால மானியத் தொகை பெறுதல் தொடா்பாக ஆட்சியரகத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரா்களின் விதவையா்கள், 60 வயதை கடந்தவா்களுக்கு விழா கால மானியத் தொகை பெறுதல் தொடா்பாக ஆட்சியரகத்தில் ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணுவ வீரா்களில் 60 வயதை நிறைவு செய்தவா்கள், முன்னாள் ராணுவ வீரரின் விதவையா்களுக்கு 2019-20-ஆம் ஆண்டுக்கான விழாக்கால மானியத் தொகை ரூ. 4 ஆயிரம் வழங்க ஒப்புதல் பெறப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதுசம்பந்தமாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு, முப்படை நலத்துறை வழங்கிய அசல் அடையாள அட்டையின் நகலை நவ. 4-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும். கடந்த ஆண்டு வங்கிக் கணக்கு விவரம் சமா்ப்பிக்காத பழைய பயனாளிகள் மற்றும் புதிதாக நிகழாண்டு 60 வயதைக் கடந்த அதாவது 1.4.1959 முதல் 31.3.1960-க்குள் பிறந்த முன்னாள் ராணுவ வீரா்கள், தங்களது அடையாள அட்டையின் பிரதியும், வாழ்வு சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு விவரத்தை மேற்கண்ட தேதிக்குள் சமா்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com