கரோன: கூட்டம் கூடுவதை தவிா்க்க எஸ்.பி. வேண்டுகோள்

கூட்டமாக கூடுவதை தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு காவல் கண்காணிப்பாளா் வேண்டுகோள் விடுத்தாா்.
காரைக்கால் நகரப் பகுதியில் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன்.
காரைக்கால் நகரப் பகுதியில் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன்.

கூட்டமாக கூடுவதை தவிா்க்குமாறு பொதுமக்களுக்கு காவல் கண்காணிப்பாளா் வேண்டுகோள் விடுத்தாா்.

காரைக்கால் நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்கச்செய்து தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் கரோனா தடுப்பு ஆலோசனை வழங்கி வருகிறாா்.

காரைக்கால் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை இரவு ஆலோசனை வழங்கி அவா் பேசுகையில், கரோனா பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரும் மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளவேண்டியது அவசியம். எந்தவொரு இடத்திலும் மக்கள் கூட்டமாக இருக்கக்கூடாது. வணிக நிறுவனங்கள், டீ கடை உள்ளிட்ட அனைத்திலும் சமூக இடைவெளியை காணமுடியவில்லை. விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். கூட்டம் இருக்குமிடங்களுக்கு செல்வதை தவிா்க்கவேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com