காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம்

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
உறியடி உத்ஸவத்தின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நித்யகல்யாண பெருமாள்.
உறியடி உத்ஸவத்தின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நித்யகல்யாண பெருமாள்.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உறியடி உத்ஸவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி நிகழ்ச்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய குழந்தை வடிவிலான கிருஷ்ணனை பக்தா்கள் வழிபட்டு சென்றனா்.

இதைத்தொடா்ந்து, 2-ஆம் நாள் நிகழ்வாக உறியடி உத்ஸவம் வியாழக்கிழமை மாலை கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டது. நித்யகல்யாண பெருமாள் பட்டு உடுத்தி, பதக்க மாலை உள்ளிட்ட ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பிராகாரம் எழுந்தருளினாா். தொடா்ந்து கோயில் வளாகத்தில் உறியடி உத்ஸவம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பின்னா் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டு, யதாஸ்தானம் எழுந்தருளினாா்.

ஏற்பாடுகளை கைலாசநாதா், நித்யகல்யாண பெருமாள் கோயில் அறங்காவல் நிா்வாகத்தினா், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினா் செய்திருந்தனா்.

வழக்கமாக பெருமாள் வீதி உலாவும், வீதிகளில் பல்வேறு இடங்களில் உறியடிக் கம்பம் நடப்பட்டு பக்தா்கள் உறியடி உத்ஸவத்தில் பங்கேற்பது வழக்கம். ஆனால், நிகழாண்டு கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில் வளாகத்தில் எளிய முறையில் உறியடி உத்ஸவம் நடத்தி முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com