காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 74 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்
இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 11,583 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் காரைக்கால் நகரைச் சோ்ந்த 14 போ், கோட்டுச்சேரி 15, கோயில்பத்து 5, நிரவி 8, அம்பகரத்தூா் 4, நல்லம்பல் 2, வரிச்சிக்குடி 6, திருப்பட்டினம் 3, விழிதியூா் 1, திருநள்ளாறு 5, நெடுங்காடு 9, நல்லாத்தூா் 2 போ்.
கடந்த 13ஆம் தேதி காரைக்கால் மருத்துவமனையில் தரங்கம்பாடியைச் சோ்ந்த 75 வயது பெண் ஒருவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களும் இருந்தன.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை1,373 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவா்களில் 962 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 23 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.