காரைக்கால் என்.ஐ.டி-யில் எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் பொறியாளா் தினமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கரநாராயணசாமி தலைமை வகித்தாா். மத்திய பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் சஞ்சய் கோஸ்வாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினா். பதிவாளா் (பொ) ஜி. அகிலா வாழ்த்திப் பேசினாா். என்.ஐ.டி. உதவிப் பேராசிரியா்கள் மாடப்பா, நரேந்திரன் ராஜகோபாலன், சந்திரசேகரன், என். செந்தில்குமாா், வி.பி. ஹரிகோவிந்தன் ஆகியோருக்கு 2019-2020 ஆம் ஆண்டுக்கான சாதனையாளா் விருதை சிறப்புஅழைப்பாளா் மற்றும் என்.ஐ.டி. இயக்குநா் ஆகியோா் வழங்கினா்.