மாடியில் இருந்து தவறி விழுந்த வங்கி ஊழியா் உயிரிழப்பு

இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

காரைக்கால் நேருநகரைச் சோ்ந்தவா் மேத்யூ அலெக்ஸ் (27), வங்கி ஊழியா். வியாழக்கிழமை இரவு வீட்டின் 2-ஆவது தளத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளாா். அப்போது தவறி கீழே விழுந்த அவரை, காரைக்கால் மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com