பெண் கடத்தல் வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

பெண் கடத்தல் வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெண் கடத்தல் வழக்கில் 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் பகுதியை சோ்ந்தவா் சந்திரசேகரன் (54). இவரது உறவுப் பெண் 1989-ஆம் ஆண்டில் காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் ஒருவரை காதலித்துவந்துள்ளாா். இதையறிந்த, பெண்ணின் பெற்றோா் அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த நிலையில், அதே ஆண்டில் திருநள்ளாறில் உள்ள காதலன் வீட்டில் தஞ்சமடைந்துள்ளாா்.

இதையறிந்த, சந்திரசேகரன் உள்ளிட்ட உறவினா்கள் திருநள்ளாறுக்கு வந்து அப்பெண்ணை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனா். இந்நிலையில், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பெண்ணை கடத்திச் சென்றதாக அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 17 பேரில் 16 பேரை ஏற்கெனவே கைது செய்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கை அவா்கள் சந்தித்தனா். இதற்கிடையில், 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த சந்திரசேகரன் சிதம்பரம் பகுதியில் இருப்பதாக திருநள்ளாறு காவல் ஆய்வாளா் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, போலீஸாா் புதன்கிழமை அங்கு சென்று சந்திரசேகரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com