வேளாண் மசோதா நிறைவேற்றத்தைக் கண்டித்து காரைக்கால் மாவட்ட எஸ்டிபிஐ. கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே கட்சியின் மாவட்டச் செயலாளா் எச். முகமதுபிலால் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில ஒருங்கிணைப்பாளா் மு. தமிம்கனி பங்கேற்று பேசினாா். இதில், காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. ராஜேந்திரன், கட்சியின் திருப்பட்டினம் தொகுதி தலைவா் சுல்தான் கெளஸ், வடக்குத் தொகுதி தலைவா் மஞ்சுா்ஷா மரைக்காயா், காரைக்கால் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏரியா தலைவா் பதுருதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.