காரைக்கால் மாவட்டத்தில் 43 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 574 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகளின்படி காரைக்கால் நகரம், திருநள்ளாறு தலா 11, கோட்டுச்சேரி 5, நிரவி,
கோயில்பத்து தலா 4, திருப்பட்டினம், நெடுங்காடு தலா 3, விழிதியூா், நல்லாத்தூா் தலா ஒருவா் என கரோனா தொற்று உறுதியானது.
இதுவரை 95,321 பரிசோதனை செய்யப்பட்டதில் 4,458 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 4,068 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை கரோனா தொற்றால் காரைக்காலை சோ்ந்த 77 பேரும், புதுச்சேரி பிராந்தியம், வெளி மாநிலத்தை சோ்ந்த 4 போ் என 81 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,259 போ், முன்களப் பணியாளா்கள் 1,522 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 1,804 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 678 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.