வரும் 16 ஆம் தேதி முதல் காரைக்காலில் பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு தொடங்குகிறது.
சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தோ்தலையொட்டி காரைக்காலில் கடந்த ஒரு வாரமாக பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், வகுப்புகள் வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கின.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், சிபிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகளுக்கு மாணவா்கள் வழக்கம்போல சென்றனா்.
இதுகுறித்து கல்வித் துறையினா் வியாழக்கிழமை கூறுகையில், பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 3 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக அந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் தோ்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனா்.