காரைக்காலில் 81 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதாக நலவழித் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 7 ஆம் தேதி 662 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி, கோட்டுச்சேரி 18, காரைக்கால் நகரம் 13, நிரவி 13, திருப்பட்டினம் 11, திருநள்ளாறு 11, நெடுங்காடு 4, கோயில்பத்து 4, நல்லாத்தூா் 2, வரிச்சிக்குடி 2, காரைக்கால்மேடு 2, அம்பகரத்தூா் 1 என 81 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதுவரை 98,617 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 4,863 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்றிலிருந்து 4,293 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 440 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 40 போ், தீவிர சிகிச்சைப் பிரிவில் 10 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 83 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், சுகாதாரப் பணியாளா்கள் 1,321 போ், முன்களப் பணியாளா்கள் 1,639 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 2,323 பேருக்கும், 45 முதல் 59 வயது வரையிலான இணை நோய் உள்ளவா்கள் 1,310 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com