காரைக்கால் கணக்கு மற்றும் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுவோா் வாழ்வாதார உறுதி சான்றிதழ் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கணக்கு மற்றும் கருவூல அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியா்கள் மே மாதத்தில் அலுவலக நாள்களில் காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரை மற்றும் பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை கருவூலத்தில் நேரில் வந்து கையொப்பமிட்டோ, வாழ்வு சான்றிதழ் அளித்தோ அல்லது ஜீவன் பிரமான் அளித்தோ தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்துகொள்ள வேண்டும். தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும். ஓய்வூதியதாரா்கள் நேரில் வரும்போது முகக் கவசம் அணிந்து வருவதோடு, அலுவலகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். சான்றிதழ் சமா்ப்பிக்க வரும்போது, ஓய்வூதிய புத்தகம், வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை, செல்லிடப்பேசியையும் கொண்டுவரவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.