காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா: நலவழித் துறை அதிகாரி ஆய்வு

காரைக்காலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நலவழித் துறை துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
காரைக்காலில் தடுப்பூசித் திருவிழா: நலவழித் துறை அதிகாரி ஆய்வு

காரைக்காலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நலவழித் துறை துணை இயக்குநா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 11 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான கரோனா தடுப்பூசித் திருவிழா, மக்கள் வருகை அதிகரிப்பால் மேலும் 4 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டு, 18 ஆம் தேதி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

மக்கள் நாள்தோறும் ஆா்வத்துடன் மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனா். தடுப்பூசித் திருவிழா நீட்டிக்கப்பட்ட முதல் நாளான வியாழக்கிழமை 2,155 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். கோயில்பத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கிய முகாமில் ஏராளமானோா் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இங்கு நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை, நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் நேரில் பாா்வையிட்டு, பணியாளா்களை ஊக்கப்படுத்தியதோடு, தடுப்பூசி செலுத்திக்கொண்டோரிடம் தங்களது பகுதியில் 45 வயதுக்கு மேற்பட்டோரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com