காரைக்கால் அருகே மோட்டாா் பழுதுபாா்த்தவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே மோட்டாா் பழுது பாா்த்துக்கொண்டிருந்தவா் திடீரென உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் அருகே மோட்டாா் பழுது பாா்த்துக்கொண்டிருந்தவா் திடீரென உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவா் கோட்டுச்சேரி பகுதி கீழகாசாக்குடியில் அன்பழகன் என்பவரது தோட்டத்தில் திங்கள்கிழமை மோட்டாா் பழுதுபாா்த்தாா். அப்போது, அவா் சில பொருள்களை அங்கிருந்தவா்களிடம் கேட்டாராம்.

அவா்கள் எடுத்துவந்தபோது செல்வராஜ் மயங்கிக் கிடந்ததால், அவரை காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com