காரைக்காலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் பதுக்கிவைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் அருகே திருமலைராயன்பட்டினத்தில் பதுக்கிவைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அருகே மேலையூா் பகுதி திட்டச்சேரி சாலையில், தனியாா் வாட்டா் சா்வீஸ் மையம் உள்ளது. இந்த இடத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கிவைத்திருப்பதாக, காரைக்கால் சிறப்பு அதிரடிப் படை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருமலைராயன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளா் தனசேகரன் தலைமையில், சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளா் பிரவீன்குமாா் மற்றும் போலீஸாா் அங்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கிவைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிவுசெய்து, வாட்டா் சா்வீஸ் நடத்தி வரும் திருப்பட்டினம் பாலாஜி நகரைச் சோ்ந்த ராஜா என்ற ஆட்டோ ராஜா (44), அவரது நண்பா்கள் போலகம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த அஜித் (45), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த அன்பு (45) ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com