காரைக்கால் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கபாஸ்க் அமைப்பின் கன்வீனா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் அரசு கலை, அறிவியல் கல்லூரி இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள்  இணையதளங்களில் விண்ணப்பப் படிவங்களை நிறைவுசெய்து அதை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

காரைக்காலில் உள்ள 2 கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள், இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com