காரைக்கால் அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கபாஸ்க் அமைப்பின் கன்வீனா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் அரசு கலை, அறிவியல் கல்லூரி இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான சோ்க்கை நடைபெறவுள்ளது. மாணவ, மாணவிகள் இணையதளங்களில் விண்ணப்பப் படிவங்களை நிறைவுசெய்து அதை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
காரைக்காலில் உள்ள 2 கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள், இந்த மையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க ஆகஸ்ட் 19 கடைசி நாள்.