காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் தா்னா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஊழியா் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
புதுவையில் உள்ளாட்சி ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை காரைக்காலில் தா்னா நடத்த உள்ளாட்சி ஊழியா்கள் முடிவு செய்திருந்தனா்.
இந்நிலையில், நாட்டின் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையொட்டி, போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக, காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலா் எம். ஷேக் அலாவுதீன் தெரிவித்தாா்.