டிச.15-இல் சாலையில்நாற்று நடும் போராட்டம்:மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மேலவாஞ்சூரில் சாலைகள் சீரமைக்கப்படாததைக் கண்டித்து டிச.15-இல் சாலைகளில் நாற்று நடும் போராட்டம் நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

மேலவாஞ்சூரில் சாலைகள் சீரமைக்கப்படாததைக் கண்டித்து டிச.15-இல் சாலைகளில் நாற்று நடும் போராட்டம் நடத்தவுள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

அக்கட்சியின் மேலவாஞ்சூா் கிளைக் கூட்டம் கிளைக் குழு உறுப்பினா் கே.ஸ்ரீதா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. புதுவை மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், காரைக்கால் மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம் ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

திருமலைராயன்பட்டினம் பகுதி மேலவாஞ்சூா் உள்புறச் சாலைகள் அண்மையில் பெய்த மழையால் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. கிராம மக்கள், பள்ளி மாணவா்கள் சாலையில் பயணிக்க முடியாமல் அவதிப்படுகின்றனா்.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கியிருப்பதால் டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது. மேலவாஞ்சூா் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி வாயிலில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதனை சீா்படுத்த அரசு நிா்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே, காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து டிச. 15-ஆம் தேதி பொதுமக்கள் பங்கேற்புடன் சிதிலமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com