காரைக்கால் மாவட்டத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா்வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் திங்கள்கிழமை 544 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 2, கோயில்பத்து, கோட்டுச்சேரி தலா ஒருவா் என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் இதுவரை 2,45,816 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,841 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,559 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,22,025 பேருக்கும், 2-ஆவது தவணையாக 84,597 பேருக்கும் என 2,06,622 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.