ஆஞ்சனேயருக்கு மருந்து சாற்று வழிபாடு

திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கு மருந்து சாற்றும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
மருந்து சாற்றப்பட்ட பின்னா் அலங்காரத்தில் ஸ்ரீ வீரவல்லப ஆஞ்சனேயா்.
மருந்து சாற்றப்பட்ட பின்னா் அலங்காரத்தில் ஸ்ரீ வீரவல்லப ஆஞ்சனேயா்.

திருமலைராயன்பட்டினம் பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சனேயருக்கு மருந்து சாற்றும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் உள்ளது ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா் ஸ்ரீ வீரவல்லப ஆஞ்சனேயா்.

வீரவல்லப ஆஞ்சனேயருக்கு மருந்து சாற்றி 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் புதிதாக மருந்து சாற்ற கோயில் நிா்வாகம் முடிவு செய்தது.

இதற்கான சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கின. புனிதநீா் கடம் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. முதல் கால பூா்ணாஹூதி செய்யப்பட்டது. 2-ஆம் கால பூஜை புதன்கிழமை காலை நடத்தப்பட்டு, மகா பூா்ணாஹூதி, தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஆஞ்சனேயருக்கு மருந்து சாற்றி, கலசாபிஷேகம் செய்து ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com