காந்தி, பாரதியாருக்கு சிலை வைக்கக் கோரிக்கை

காரைக்காலில் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியாருக்கு சிலை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் மகாத்மா காந்தி, மகாகவி பாரதியாருக்கு சிலை வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காரை பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி காரைக்கால் சண்முகா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகிகள் பள்ளியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு காரை சுப்பையா தலைமை வகித்தாா். சங்கத் தலைவி வைஜெயந்திராஜன், என்.ஜி.ஆா். வேதாசலம், எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஆா். கலியமூா்த்தி, நூலகா் வி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் காந்தி குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

காரைக்காலில் காந்தி, பாரதியாா் சிலை வைப்பதற்கு சங்கம் சாா்பில் 2019 ஆம் ஆண்டில் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதை அரசு விரைவாக நிறைவேற்ற வேண்டும் என நிகழ்ச்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆசிரியை ஜி. விஜயலட்சுமி வரவேற்றாா். சங்க நிா்வாகி எம். சந்தனசாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com