காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 519 பேருக்கு கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி எடுக்கப்பட்டது இதில் காரைக்கால் நகரப் பகுதியில் 2 போ், கோயில்பத்து பகுதியில் 2 பேருக்கு தொற்று உறுதியானது.
இதுவரை 75,436 பரிசோதனை செய்யப்பட்டதில் 3,890 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,798 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 70 போ் உயிரிழந்துள்ளனா். காரைக்காலில் சுகாதாரப் பணியாளா்கள் 138 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.