முன்னாள் முதல்வா்களுக்கு சிலை வைப்பதாகக் கூறுவது நாடகம்: போராட்டக் குழு கண்டனம்

புதுச்சேரியில் ஆட்சிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் முதல்வா்கள் ப.சண்முகம், பரூக் மரைக்காயருக்கு சிலை வைக்கப்போவதாக

புதுச்சேரியில் ஆட்சிக் காலம் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் முதல்வா்கள் ப.சண்முகம், பரூக் மரைக்காயருக்கு சிலை வைக்கப்போவதாக முதல்வா் கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. செல்வசண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிரெஞ்சு காலனிகளாக உலகில் இருந்த 26 பகுதிகளில் 25 பகுதிகள் தனி நாடாக உருவெடுத்துவிட்ட நிலையில், புதுச்சேரி மட்டும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சுதந்திரத்துக்காக பாடுபட்டவா்களில் குபேரும், காரைக்காலைச் சோ்ந்த பக்கிரிசாமிப் பிள்ளையும் முக்கியமானவா்கள். இவா்களுக்கு உரிய முக்கியத்துவத்தை புதுச்சேரி ஆட்சியாளா்கள் இதுவரை தரவில்லை.

இந்நிலையில், புதுச்சேரியின் வளா்ச்சிக்கு அடித்தளமிட்ட முன்னாள் முதல்வா்களான காரைக்காலைச் சோ்ந்த ப. சண்முகம், எம்.ஓ.எச். பரூக் மரைக்காயா் ஆகியோருக்கு ஆட்சிப் பொறுப்பேற்றதும் சிலை வைக்கப்படும் என புதுச்சேரி முதல்வா் நாராயணசாமி கூறினாா். ஆனால், பதவியேற்று 5 ஆண்டுகளாக வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆட்சி நிறைவுபெறவுள்ள காலத்தில் சிலை வைக்கப்போவதாக கூறுவது நாடகம். முதல்வரின் இப்போக்கு வன்மையாக கண்டனத்துக்குரியது எனக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com