நேரு மாா்க்கெட், வாரச் சந்தை: ஆட்சியரிடம் எம்எல்ஏ வலியுறுத்தல்

காரைக்கால் நேரு மாா்க்கெட், வாரச் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைவான நடவடிக்கை எடுக்குமாறு, காரைக்கால்

காரைக்கால் நேரு மாா்க்கெட், வாரச் சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைவான நடவடிக்கை எடுக்குமாறு, காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: காரைக்கால் நகரப் பகுதியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடப்படாததால், சாலைகள் சிதிலமடைந்து பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். எனவே, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை விரைவாக கட்டிமுடிக்கவும், குடிநீா் குழாய் பதிப்பால் ஏற்பட்ட சாலை சிதிலங்களை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் முடக்கப்பட்டதை வாரச் சந்தையை விரைவாக திறக்கவும், நேரு மாா்க்கெட் புதிய கட்டடத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து, மாா்க்கெட்டை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் வலியுறுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்வதாகவும், சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்க அரசிடமிருந்து நிதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும் எனவும் ஆட்சியா் தெரிவித்தாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com