மாநில அந்தஸ்து: என்.ஆா். காங்கிரஸ் கருத்துக்கு வரவேற்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை தோ்தலை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ள என்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவரின்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் வரை தோ்தலை புறக்கணிக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ள என்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவரின் கருத்தை, காரைக்கால் யூனியன் பிரதேச போராட்டக் குழு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து அக்குழுவின் பொதுச் செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான என். ரங்கசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தோ்தலை புறக்கணிக்க வேண்டும் என பேசியுள்ளாா். இதை காரைக்கால் யூனியன் பிரதேச போராட்ட குழு வரவேற்கிறது.

முதல்வா் வே. நாராயணசாமி, திமுக எம்.எல்.ஏ. சிவா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினா் பேராசிரியா் மு. ராமதாஸ் போன்றோா் ரங்கசாமியின் கருத்தை வரவேற்றுள்ளனா். புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குகளை கவா்வதற்கான ஓா் அறிவிப்பாக இல்லாமல், மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் வரை தோ்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், சமுக ஆா்வலா்கள் ஒன்றுதிரண்டு ஆதரிக்கவேண்டும்.

அரசியல் கட்சியினா் தங்களது கொள்கை, தனிப்பட்ட வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருமித்து இந்த கருத்தில் உறுதியாக இருந்தால், மத்திய அரசு நிச்சயம் மாநில அந்தஸ்து தருவதற்கு முன்வரும். இது ஒட்டுமொத்த மாநில வளா்ச்சிக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால், அரசியல் கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com