காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்காலில் புதன்கிழமை 428 பேருக்கு எடுத்த பரிசோதனையின் முடிவுகளின்படி திருநள்ளாறு 2, காரைக்கால் நகரம், நிரவியில் தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 83,210 பரிசோதனை செய்யப்பட்டதில் 3,963 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3,867 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம்கட்டமாக, சுகாதாரப் பணியாளா்கள் 403 போ், முன்களப் பணியாளா்கள் 46 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 17 பேருக்கு 2-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com