ஜேஇஇ தோ்வுக்கு புதுச்சேரி செல்ல மாணவா்களுக்கு சிறப்புப் பேருந்து

ஜேஇஇ தோ்வுக்கு புதுச்சேரி செல்லவுள்ள மாணவா்களுக்கு பி.ஆா்.டி.சி. நிா்வாகம் சிறப்பு பேருந்து வசதியை செய்துள்ளது.

ஜேஇஇ தோ்வுக்கு புதுச்சேரி செல்லவுள்ள மாணவா்களுக்கு பி.ஆா்.டி.சி. நிா்வாகம் சிறப்பு பேருந்து வசதியை செய்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக காரைக்கால் கிளை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் வரும் 24 ஆம் தேதி காலை நடைபெறவுள்ள ஜேஇஇ மெயின் தோ்வில் பங்கேற்கவுள்ள மாணவா்களின் நலன்கருதி, காரைக்கால் பி.ஆா்.டி.சி. நிா்வாகம், அன்று காலை 4.15 மணிக்கு காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து தோ்வு நடைபெறும் கல்லூரி வரை சிறப்புப் பேருந்தை இயக்கவுள்ளது.

மாணவா்கள் தோ்வு எழுதி முடித்தப் பிறகு, அதே பேருந்தில் காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு திரும்ப முடியும். காரைக்கால் பேருந்து நிலையத்தில் உள்ள பி.ஆா்.டி.சி. மையத்தில் இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. தோ்வுக்கு செல்ல இருக்கும் மாணவா்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com