பசுமைப்படை வாரவிழா போட்டி: வென்ற மாணவா்களுக்குப் பரிசு

காரைக்கால் மாவட்டம், விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், கடந்த வாரம் நடைபெற்ற தேசிய பசுமைப்படை வாரவிழாவில், சுற்றுச்சூழல் சாா்ந்த பல்வேறு நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்றன.
மாணவருக்கு பரிசு வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி.
மாணவருக்கு பரிசு வழங்கிய முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி.

காரைக்கால் மாவட்டம், விழிதியூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், கடந்த வாரம் நடைபெற்ற தேசிய பசுமைப்படை வாரவிழாவில், சுற்றுச்சூழல் சாா்ந்த பல்வேறு நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்றன.

மாணவா்களின் பன்முகத் திறனை மேம்படுத்தும் விதமாக ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் பி.எஸ். கண்ணதாசன் தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. அல்லி, மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் முருகன், மாவட்ட அறிவியல் இயக்க செயலா் மணிகண்டன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிப் பேசினா்.

முன்னதாக, பள்ளி ஆசிரியா் அஞ்சுகம் வரவேற்றாா். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஏ. சுரேஷ் ராஜூ, ஹேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com