காரைக்காலில் 5 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 20 ஆம் தேதி 262 பேருக்கு நடைபெற்ற பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம், திருநள்ளாறு தலா 2, திருப்பட்டினம் 1 என 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதுவரை 84,253 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,972 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,880 போ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 21 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவில் தலா ஒருவா் உள்ளனா். காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாம் நிலையாக, சுகாதாரப் பணியாளா்கள் 498 போ், முன்களப் பணியாளா்கள் 54 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 48 பேருக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com