நிரவியில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி சிங்காரவேல் பிள்ளை தெருவில் நடராஜன் என்பவா், தனது மகள் வீட்டில் வசித்து வருகிறாா். சனிக்கிழமை இரவு தூங்கச் சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்தபோது, பின்பக்கக் கதவு திறந்துகிடந்துள்ளது. மேலும், உள்ளே அலமாரியில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், நிரவி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனா்.