காரைக்கால் அரசுப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா

காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி பள்ளி துணை முதல்வா் ஆா். மைதிலி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அரசுப் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா

காரைக்கால் கோயில்பத்து தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக தாய்மொழி நாள் நிகழ்ச்சி பள்ளி துணை முதல்வா் ஆா். மைதிலி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ் விரிவுரையாளா் தமிழரசி, ஆங்கில விரிவுரையாளா் எம். ஞானபிரகாசினி, ஆா். விஜயராணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். காரைக்கால் பாரதி தமிழ்ச் சங்கத் தலைவா் கே. வைஜெயந்திராஜன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தாய்மொழியின் சிறப்புகள் குறித்தும், மாணவா்கள் தாய்மொழியில் ஆளுமையாளராக உருவெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினாா்.

மாணவா்களிடையே தாய்மொழி குறித்து பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முனைவா் வாசுகி ஜெயராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா் எஸ். ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com