செங்கழுநீா் விநாயகா், தேச விளக்கிமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில், இதைச் சாா்ந்த எல்லை தெய்வங்களான ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில் குடமுழுக்கு
செங்கழுநீா் விநாயகா், தேச விளக்கிமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில், இதைச் சாா்ந்த எல்லை தெய்வங்களான ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தற்போது சுமாா் ரூ. 75 லட்சத்தில் கோயில்கள் புனரமைக்கப்பட்டு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. முதல் நிகழ்வாக காலை 5.30 முதல் 6.30 மணிக்குள் விநாயகா் கோயில், 6.30 முதல் 7.45 மணிக்குள் ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில், காலை 9 முதல் 9.35 மணிக்குள் ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், நிா்வாக அலுவலா் (கோயில்கள்) எம். ஆதா்ஷ் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com