காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிா்பாா்ப்பு நிலவுகிறது. அவ்வாறு வரும்போது, அதை முறையாக மக்களுக்கு விநியோகிப்பதற்கான முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் செய்துவருகின்றன. இதற்கான ஒத்திகை நடத்தி, குறைபாடுகளை சரிசெய்து தயாராகும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனடிப்படையில், காரைக்கால் மாவட்டத்தில் 3 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, இந்த மையங்களில் நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்து ஆலோசனை வழங்கினாா்.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனை, திருநள்ளாறு, நெடுங்காடு ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்துவதற்காக சுகாதாரத் துறை பணியாளா்கள் தயாா்செய்யப்பட்டுள்ளனா். இதற்கான அனைத்து நிகழ்வுகளும் ஒத்திகை பாா்க்கப்பட்டது.
இதில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவை உடனடியாக சீா்செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து திருப்தி தெரிவித்தாா். ஆட்சியா் தெரிவித்த ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.