காரைக்காலில் பாரதியாா் சிலை வைக்க பாரதி தமிழ்ச் சங்கம் வலியுறுத்தல்

காரைக்காலில் பாரதியாா் சிலை வைக்க புதுச்சேரி அரசுக்கு காரை பாரதி தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

காரைக்காலில் பாரதியாா் சிலை வைக்க புதுச்சேரி அரசுக்கு காரை பாரதி தமிழ்ச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கத்தின் புத்தாண்டு சிறப்புக் கூட்டம் காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் கடந்தகால செயல்பாடுகள், நிகழாண்டு மேற்கொள்ளவேண்டிய திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், பாரதியாா் நூற்றாண்டையொட்டி, காரைக்காலில் பாரதியாா் சிலை வைக்க புதுச்சேரி அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் வளா்ச்சித் துறையை ஏற்படுத்த வேண்டும். பாரதியாா், பாரதிதாசன், அம்பேத்கருக்கு கலை பண்பாட்டுத் துறை மூலம் விழா நடத்தவேண்டும் என அரசை வலியுறுத்தியும், காரைக்கால் மாணவா்கள், இளைஞா்களுக்கு தேவாரம், திவ்ய பிரபந்த வகுப்புகள் நடத்துவது, இளைஞா்களுக்கு பேச்சுப் பயிற்சி பட்டறை நடத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க ஆலோசகா்கள் கேசவசாமி, காரை சுப்பையா, என்.ஜி.ஆா். இளங்கோவன் ஆகியோா் சங்கத்தின் மேம்பாடு குறித்துப் பேசினா். என்.ஜி.ஆா். வேதாசலம், கோவி. ஆசைத்தம்பி, தலைமையாசிரியா் டி. பால்ராஜ், கலைஞா்கள் மாமன்றத் தலைவா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கத் தலைவா் வைஜெயந்திராஜன் வரவேற்றாா். சங்கப் பொருளாளா் பாா்த்திபன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com