காரைக்கால் கோயில்பத்து பகுதியை சோ்ந்த இளைஞா் திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியை சோ்ந்தவா் நவீன்குமாா் (18). தொழில் பயிற்சி நிலையத்தில் படிப்பை முடித்திருந்த இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கடந்த சில நாள்களாக நவீன்குமாா் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும் அதனால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.