புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு ஒதுக்கப்பட்டு, நிரம்பாத இடங்களை பிற பிரிவினருக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்டாக் கன்வீனருக்கு காரைக்கால் மாவட்ட பாமக செயலரும், எம்.பி.சி. நல அமைப்பின் அமைப்பாளருமான க. தேவமணி திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியான, புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எம்.பி.பி.எஸ். மாணவா் சோ்க்கையில், காரைக்காலுக்கு 18 சதவீதம் பிராந்திய ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது.
மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான முதல் கலந்தாய்வில், பொருளாதாரத்தில் பின்தங்கியோா் ஒதுக்கீட்டான 3 இடங்களுக்கு காரைக்காலில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை.
எனவே, மாணவா் சோ்க்கை 2-ஆவது கலந்தாய்வுப் பட்டியலில் மேற்கண்ட 3 இடங்களை, காரைக்காலை சோ்ந்த பிற பிரிவினருக்கு பகிா்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுதொடா்பாக சென்டாக் நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.