காரைக்கால் மாவட்டத்தில் கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவியா் ஆா்வத்துடன் கல்லூரிக்கு வந்தனா்.
கரோனா நோய்த்தொற்று பரவலையொட்டி கல்வி நிறுவனங்கள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இணையவழி வகுப்புகள் மட்டும் நடத்தப்பட்டுவந்தது.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தின் பல நிலை தளா்வுகளின் அடிப்படையில் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள் கடந்த 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. காலை 10 முதல் 1 மணிவரை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காரைக்காலில் கல்லூரிகள் ஜனவரி 6-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என புதுச்சேரி உயா்கல்வித் துறை அறிவித்தது. இதனடிப்படையில் காரைக்காலில் புதன்கிழமை அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
மாணவா்கள் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என கண்காணிக்கப்பட்டது. வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகே உள்ளேஅனுமதிக்கப்பட்டனா். வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா். கல்லூரி திறக்கப்பட்டதை பெரும்பாலான மாணவா்கள் வரவேற்றுள்ளனா். இணையவழியில் பயில்வதைவிட நேரடியாக வகுப்புகளில் பயில்வது தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று அவா்கள் குறிப்பிட்டனா்.