அரசு உதவி பெறும் பள்ளியிலிருந்து ஓய்வுபெற்றவா்களுக்கு, நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை புதுச்சேரி அரசு விரைந்து வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஓய்வூதியா் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டுவந்த ஓய்வூதியம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படாமல் உள்ளது.
ஓய்வூதியம் மட்டும் வாழ்வாதாரமாக உள்ள நிலையில், பயனாளிகள் நிலையை கருத்தில்கொண்டு புதுச்சேரி அரசு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை விரைந்து வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகளாக, கௌரவத் தலைவராக என்.ஜி.ஆா்.இளங்கோவன், தலைவராக எஸ் வைத்தியநாதன், செயலாளராக ஜி. புஷ்பராஜ், பொருளாளராக டி. நாகராஜன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.