காரைக்கால் மாவட்டத்தில் ஒருநாள் பரிசோதனையில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் வெள்ளிகிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி 201 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதன் முடிவுகளின்படி, ஒருவருக்கும் தொற்று இல்லை.
இதுவரை 64,619 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,842 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,745 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 23 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 8 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா்.