பணி நிரந்தரம் செய்யக்கோரி, புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக ( பி.ஆா்.டி.சி.) ஊழியா்கள் பணிமனையை முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் பி.ஆா்.டி.சி. நிா்வாகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியா்களாக 30-க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த ஒருமாத காலமாக காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பணிமனையில் அமா்ந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை திடீரென பேருந்துகள் பணிமனையைவிட்டு வெளியே செல்ல முடியாத வகையில், பணிமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில், போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ஊழியா்கள் 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.