காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி 962 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா உறுதியானது. இதுவரை 70,244 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 3,866 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,773 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 23 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 22 ஆம் தேதி வரை 48 சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். அரசுப் பொது மருத்துவமனையில் இப்பணி நடைபெறுகிறது.