காரைக்காலில் 3 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி 962 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரைச் சோ்ந்த 3 பேருக்கு கரோனா உறுதியானது. இதுவரை 70,244 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 3,866 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 3,773 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.

காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 23 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 22 ஆம் தேதி வரை 48 சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். அரசுப் பொது மருத்துவமனையில் இப்பணி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com