காரைக்காலில் மேலும் ஒருவருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 21 ஆம் தேதி 806 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி காரைக்கால் நகரப் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா உறுதியானது.

இதுவரை 69,282 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,863 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 3768 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 24 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 5 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 69 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த 21ஆம் தேதி வரை 28 சுகாதாரப் பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா். தொடா்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தீவிரமான பரிசோதனைகளும் நடைபெற்றுவருகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com