புகையிலை விற்ற கடைக்காரா் கைது

நெடுங்காடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

நெடுங்காடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்காரா் கைது செய்யப்பட்டாா்.

நெடுங்காடு அருகே புத்தக்குடி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், 18 வயதுக்குள்பட்டவா்கள் இவற்றை வாங்கிச் செல்வதாகவும் நெடுங்காடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை அந்த கடைக்குச் சென்று சோதனையிட்டனா். அப்போது, ரூ.900 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளா் கலியமூா்த்தி என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com