பொது இடங்களில் மது அருந்திய 15 போ் கைது

காரைக்காலில் பொது இடங்கள், பயன்படுத்தாத கட்டடங்களில் மது அருந்தியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்காலில் பொது இடங்கள், பயன்படுத்தாத கட்டடங்களில் மது அருந்தியது, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 15 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான புகாரின் பேரில், அனைத்து காவல் நிலையங்களும் தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் உத்தரவிட்டாா். இதையொட்டி, பயன்படுத்தாத கட்டடங்கள், திறந்தவெளி பகுதி, கடற்கரை சாலை, போலகம் தொழிற்பேட்டை நிலம் உள்ளிட்ட 42 இடங்களில் கடந்த வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை காரைக்கால் மாவட்ட காவல் நிலைய போலீஸாா் சோதனை நடத்தி, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 15 பேரை பிடித்தனா்.

இவா்கள்மீது திருப்பட்டினம், நிரவி, காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்து 15 பேரையும் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com