காரைக்காலில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கடற்கரை சாலையில் குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தேசியக் கொடியை ஏற்றுகிறாா். இதற்கான ஒத்திகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் ஆகியோா் மேற்பாா்வையில், காவல் துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவினா், இந்தியன் ரிசா்வ் பெட்டாலியன், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புத் துறை, என்.எஸ்.எஸ். மாணவா்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனா்.